புதிதென இதயத்தில் கோர்த்திட
ஏதுமில்லை கண்மணியே...
எத்தொலைவில் இருப்பினும்
எந்நினைவில் மலர்ந்திடுவாய்...
நின் விரல்களில் மிளிர்ந்திட்ட
இவ்வெள்ளை பூவினைப்போல்!!!
14/02/24 10.51pm
இதயத்தில் பதிந்த எனை
கழுத்தில் கட்டி கொள்ள விளைந்தேன்...
கண் படா இடத்தில் அல்ல
கைக்கெட்டும் தொலைவில் விதைத்தாள்..
16/02 11.48pm
என்னிதயத்தில் முன்பே துளிர்த்த விதை
இன்று கொழுந்து இலைகளாய் துளிர்க்க...
அவைகள்...
என் செவியில் குளிரும் இதழ் சொற்களாயினும்...
இதயத்தின் அழுந்திய கசந்த நினைவுகளில் நான் உழல...
எப்போதும் போல் அதீத எண்ணங்கள்...
வேறேதும் எதிர் பாராது செவி சேர்ந்த
மூன்று வார்த்தைகள்...
கூட இரு போதும்.
எந்தன் காயம் ஆறவில்லையே
என்ற நொடியில் கேட்ட அதே
மூன்று வார்த்தைகள்...
கூட இரு போதும்.
விட்டுக் கொடுப்பது புதிதல்ல
விலகி கிடப்பது புதிதல்லவா...
விரல்களை நறுக்கி கொண்டேன்
சற்று விலகியிருந்திடு என...
ஐய்யகோ...
விரல்களுக்கிட்ட விலங்கை
என் நினைவுகளுக்கிட இயலவில்லையே!!!
மீண்டும் அதே வார்த்தைகள்...
கூட இரு போதும்.
எனக்கென ஏதேதோ செய்கிறாயே
நான் என் செய்வேன் என்ற நிலையில்
மீண்டும்...
கூட இரு போதும்.
உற்றமும் சுற்றமும்
உற்ற நட்பும் கூட
தள்ளி வைத்திட்ட எனை
முற்றும் இவளென எனை
அள்ளி கொண்ட என்னவளின்
அம்மூன்றும் வார்த்தைகள்...
கூட இரு போதும்.
25/02/24 10.43pm
மங்கையாகினாய்
மாந்தர் தம் வாழ்வில்
விளக்கேற்றிடும் மாதுமாகினாய்...
அண்டி வந்தோர்க்கு
உயிர் மீட்டும் ஒளிச்சுடராகினாய்...
அன்பினார்க்கு இல்லாளாகினாய்...
எண்ணிய கணமெல்லாம்
கானலாகிய போதும்,
துயரதை தூரத்தில் வைத்து
துவளா தூணாகிடுவாய்...
மாதுவாய், ஒளிச்சுடராய்
இல்லாளாய், தூணாய்...
இன்னும் சிலருக்கு ஆணி வேராய்
முதுகெலும்பாய், பக்க துணையாய்...
...
எந்தனுக்கோ யாதுமாய்,
போதும் என கூறாது இவள் அன்பு...
விண்ணொளியில் கண் சிமிட்டும்
விண் சூடரொளியே...
செல்லும் பாதையில் சறுக்கல்கள் இருப்பினும்
எண்ணம் எதிலும் உறுதுணையாகிடு...
நாம் காண கோடி காட்சிகள் உண்டு
இவ்வையகதனில்...
கைக்கோர்த்து கதை பேச
காலம் முழுதும் உன்னோடு நான்.
Hun
08/03/24 11.48pm
எங்கனம் சொல்வேன்
கட்டுக்குள் வைத்திட...
அக்கடவுளுக்கும் கண்ணில்லை
கொண்ட காதலுக்கும் கண்ணில்லை...
எனை மீறி, எல்லை தாண்டி
குளிர்ந்திடும் இப்பாதங்களிடம்
எங்கனம் சொல்வேன்...
கட்டிலறை நினைவுகளை
கட்டுக்குள் வைத்திட...
பல மைல் தொலைவிலிருந்தும்
அருகே உணரும் உனையும்,
விரல் கோர்த்து
இதயம் துளிர்த்த நொடிகளையும்...
எங்கனம் சொல்வேன்...
கட்டுக்குள் வைத்திட...
விரல் சேர்த்து இதழ் பதித்த
முதல் முத்தத்தையும்,
விரல் பிரிந்து விடை கொடுத்த
கடைசி தீண்டலையும்...
எங்கனம் சொல்வேன்...
கட்டுக்குள் வைத்திட...
...
இடம்கொடாது இச்சிந்தையும்
நினை தீண்டாது...
கவிகளிலும் கூட...
எங்கனம் சொல்வேன்...
கட்டுக்குள் வைத்திட...
கட்டுக்குள் இயலாவிடினும்
கட்டி வைத்துக்கொள்கிறேன்.
ஒரு முறையேனும்
உன் விழியாகினும்
எனை தீண்டி விடாதா என...
நீதான் தேவை என்...
13/03/24 12.46am
விடையறியா வினாக்களுக்கும்
செவி சேர்ந்த விடைகளுக்கும்
இடம் விட்டுச்சென்றதோ இம்மௌனங்கள்...
அகவும் மயில் மொழியினுள்
அகச்சிறையாகினேன்...
அக்கணம் தாண்டி
அகம் தேடும்
அகல் விழியாளின் வருகைகெனவே!!!
16/03/24 03.02pm
youtube.com
என்னகம் மகிழ காணும் காட்சிகளிலும்
நின் முகம் நிழலிடுவதும் ஏனோ!!!
18/03/24 10.46am
தொடும் தொலைவில் நீ இல்லையெனினும்
நினைத்திடும் நொடிகளில்
அணைத்திடும் உன் உணர்வுகள் போதுமடி...
மூச்சுக்காற்றின் திணறலிலும்
முட்டி மோதிய உன் நினைவலைகளில்...
என்னோடு நீ!!!
youtu.be
மூச்சிலே வான் ஒலி பாடுதே!!!
22/03/24 11.48pm
நெஞ்சில் பாரம் சேராது
சற்று விதும்பு விழிநீர் துளிர்த்திடு...
Enjoy the videos and music that you love, upload original content and share it all with friends, family and the world on YouTube.
youtu.be
கானல் கடல் கப்பலின்
ஓர் அகதியின் காதலாகினும்
கண்ணீர் துளிகளால்
இச்சுமை தீராதெனினும்...
சிதறும் சிறு துளிநீர்களால்
இலகுவாகட்டும் இதயமதின் பாரமும்...
25/03/2024 03.36am
youtu.be
Memories Azhagu...
28/03/2024 03.12 pm
உடல் அலுப்பிலும்
உறங்கவில்லை உன் நினைவுகள்...
இங்கே என்னிதயம் கனத்திட
அங்கே என் செய்கிறாய்?
கருவளையத்தை மெறுகேற்றுகிறாயோ...
youtube.com
31/03/2024 2.14 am