• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❣️குயிலே குயிலினமே..!❣️

ஒற்றை ரோஜா ஒன்றையே
தன் தனித்தன்மையாய் சூடிக்கொண்டவள்...
இனி நினைத்தாலும் சூடிடலாகா...


நித்திரையிலாது கல்வியில்
கண்யரந்த விழிகள்...
இன்றோ வற்றிய நீருற்றாய்...

ஒற்றை செடியாய் அவளும்...
அதில் மலர்ந்த பூவாய் இவளும்...

மதுவினால் மாய்ந்த
ஓர் உயிர் துளியால்
உதிர்ந்த இக்காவியம்...

துயருற்ற மணித்துளிகளிலும்,
வழி(லி)யிலே
துணையிருந்த மயில்களும்...
செவிகேட்ட இவ்வரிகளும்...

 
விரல்களில் படர்ந்து
பலவாறு சீர்திருத்தி
வேண்டுவன கொண்டு...

நெருப்பிலே அவிந்து
வெந்தது தணிந்ததும்...

விரல்களில் வருடி
இதழ்களை தாண்டி
நாவினை தீண்டிட...


ஏங்கியதோ
பக்குவமாய் சமைத்த
என் அன்னமும்!!!

பிசைந்த வெள்ளைச் சோற்றில்
உப்பு/கெட்டிப் பருப்பும், மனம் கமிழும் நெய்யும்!!!
கூடே கடைந்த பச்சைக் கீரை...

என்றோ எப்போதோ
உன் நா தீண்டிடும்
என் கைருசியை கொண்டே,
நாளொரு வண்ணமாய்
திறன் கொண்டது

என் அன்ன கின்னங்களும்!!!
 
1000011846.jpg
தூரம் சென்றாலும்...
என் மூச்சுக்காற்றில்,
உன் சுவாசம் தேடுகிறேன்...
 
இமை முடிய கணங்களில்
இதயத்தில் கனத்தது...
இதழ் பேசா மொழிகளா
இதயத்தின் குமறல்களா...

முகங்காண நாழிகையிலும்
அகமுணரும் என் நெஞ்சமே
உன் செவிகள் இன்று
தேனிசையில் மிதந்து மந்தமானதோ...
அல்ல
இவ்வுலக கவலையில் செவிடானதோ...

மௌன மொழிகளில் துயில் கொண்டேனோ
குமறல்கள் எனை உலுக்கியதோ
அல்ல

இதுவும் என் அதீத எண்ணங்களின் கோப்போ!!!

தேற்றிக்கொள்ள என் காதலும்,
விடையறியா வினாக்களுக்கு
நம்பிக்கையும் விடையானது.

சோர்வினில் அயர்ந்த தோகை மயிலும்,
வென்பஞ்சு முயலில்
கூடு கட்டிய குயிலும்
துயரில்லா துயிலில் துளிர்த்திட
இமை மூடிடு நீயும்...

1000012007.gif
அச்செந்நிற வானில் பகலவன் வருகையில்
இதழ் திறவா மொட்டுகளும்

மணம் கமழும், மலரிதழ்களாய்!!!
 
❣️உந்தனருகினிலே!!!❣️

உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...

உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...

மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!

View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...!
உந்தனருகினிலே!!!❣️
Love
 
இமை முடிய கணங்களில்
இதயத்தில் கனத்தது...
இதழ் பேசா மொழிகளா
இதயத்தின் குமறல்களா...

முகங்காண நாழிகையிலும்
அகமுணரும் என் நெஞ்சமே
உன் செவிகள் இன்று
தேனிசையில் மிதந்து மந்தமானதோ...
அல்ல
இவ்வுலக கவலையில் செவிடானதோ...

மௌன மொழிகளில் துயில் கொண்டேனோ
குமறல்கள் எனை உலுக்கியதோ
அல்ல

இதுவும் என் அதீத எண்ணங்களின் கோப்போ!!!

தேற்றிக்கொள்ள என் காதலும்,
விடையறியா வினாக்களுக்கு
நம்பிக்கையும் விடையானது.

சோர்வினில் சரிந்த தோகை மயிலும்,
வென்பஞ்சு முயலில்
கூடு கட்டிய குயிலும்
துயரில்லா துயிலில் துளிர்த்திட
இமை மூடிடு நீயும்...

அச்செந்நிற வானில் பகலவன் வருகையில்
இதழ் திறவா மொட்டுகளும்

மணம் கமழும், மலரிதழ்களாய்!!!
Woww
 
உன் பதிவுகள் இல்லா
பக்கங்களும்,
உன் பாதச் சுவடுகள் இல்லா
பாதையும்,
எதிரே வந்ததோ!!!

என் இரு விழியருகே
சிறு விழி நீரும் உதிர...
உன் மை விழி பார்வைகளும்
கலங்கிட...
அந்நாளும் அருகானதோ!!!

இது பிரிவில்லை எனினும்
நெஞ்சமும் கொஞ்சமாய் கனக்கிறது...


அவ்விடைவெளியை நினைக்கையில்!!!
Nice
 
தோழியென அறிமுகமானவள்
தோள்களில் இளைப்பா(ற்)றியவள்...

காலம் காலமாய்
உடனிருந்த தோழிகளே
மணமுடித்தப்பின் பாதை மா(ற்)றிடும் இவ்வுலகில்...


மணமுடித்தும் மனமாறா மயிலிறகே!!!

உன் கள்ளம் இல்லா
உள்ளம் போலவே
உன் இல்வாழ்வும் செழித்திருக்க
வாழ்த்தும் உன்னில் ஒருத்தி...

தோகை மயிலென ஆடி
கூவும் குயிலிசையென ராகம் பாடி
விண்ணோடு விலகா விண்மீன் போல்
உன்னோடு உலா வரவே
என்றும் ஏங்கிடும் இவ்வானம்பாடி!!!

caea122f-25f0-41b3-997f-2a2a2daf5c4c.jpeg
சூழ்நிலைகளில் சிக்கி தவிக்கும்
என்னால் இயன்ற ஓர் குறுங்காவியம்!!!


என்றும் அன்புடன்,
Hun❤️
 
Last edited:
விரல் தீண்டா பதிவுகளில்
விழி போகும் பயணங்கள்...
அடங்க மறுக்கும் எனை
அடக்கி வைத்திடத்தானோ...

காலச் சூழ்நிலைகளும்
அலுவல் அலுப்புக்களும்
இடைவெளியாக்கிடினும்...


விழி தேடலில் பதிவுகளும்
நினைவலைகளின் ஒற்றுமையும்
வியத்தகு வியப்பாக்கிடும்!!!
b2c2b1c6-c7af-4b06-9722-dba11b03373d~3.jpeg
காரணங்களை தேடியிருந்தால்
கணப்பொழுதினில் மறைந்திருக்க கூடும்...
அல்ல, என் கண்மணியே!!!
ரணங்களை வண்ண மலர்களாய்

மெருகேற்றும் உனை இமை பொழுத்திலும்
அகம் மறந்ததில்லை...
444a0544-4327-4307-9d49-21dcb16afa00~2.jpeg
 
பூவனத்தில் பூஞ்சோலை பூங்குயில்

பூஞ்சோலையே பூவனத்தில்
பூத்துக்குலுங்கியதோ அந்நாளில்!!!

பன்னீர் துளிகளில் நெனைந்து
சந்தன, குங்குமமிட்டு
கற்கண்டினை இதழ் சுவைக்க,
கண்ணிமைக்கும் விழிகளும் வியக்க,
முதல் முதலில் வானைக் கண்ட
இவ்வானம்பாடியின் சிறுக்காவியம்...

இலக்கியமே வியந்து போம்
அக்காவியமும்
இக்காவியாடையில் ஜொலித்திட...


ஆடையினுடே ஆங்காங்கே
மிளிர்ந்திட்ட அடவுகள்...

மெய்சிலித்து நின்ற நிமிடங்களில்...
அருகிலே இருந்த அம்மையும்
வழிவிடு எனக்கூற
சுற்றத்தை சுதாரித்து
அடியெடுத்த நாழிகைகள்...

பூஞ்சோலையின் கிளைகள் கோர்த்து
அள்ளிக்கொண்ட பூங்கொத்து,
கிளைகளிலே செந்நிறக் கோலங்கள்,
இடையினிலே வருடிய காற்குழல்கள்,
அங்கம் முழுதும் படர்ந்த பூவிதழ்கள்,
பளிச்சிடும் புகைப்பட ஒளியினையும்
தகர்த்து மின்னலிட்ட வெண்ணிற பற்கள்...

இன்னும் சற்று அருகே...
இமை மூட கனத்த நொடிகளில்...


வணங்கிட்ட கைகளும்
குடுவையில்லா விழிகளும்
இதழ் மூடா புன்சிரிப்பும்
இமை வழியே ஈரத்தை கசித்திட...

ஓ... இக்கடிகாரமும் ஏன் இன்று
இவ்வளவு துரிதமாய் உழைக்கிறது???
விழி கண்ட இக்காட்சியின் நிமிடங்கள்
உறைந்து விடக்கூடாதா!!!

நகர்ந்த நிமிடங்களோடும்
நானும் அரங்கேறவே...

அருகே சென்றதும்...


விரல்கள் கோர்த்து
தோள்கள் தொட்டதும்
என் ஜென்மம் உணர்ந்தேன்...

ஒ! சற்றுப் பொறு... என் மனமே..!
அருகே வான பிரான்!!!

இளையவளே!!!
எண்ணிறைந்த எண்ணங்களோடு
என்னிடமிலா எனை
உன்னிடம் விட்டுச்செல்கிறேன்...
மறு பிறவியேனும் உனை இணைச்சேரவே,
இப்பிறவியில் உன் வழித்துணையாகினேன்!!!

தோழியாய், காதலியாய்,
உனக்கெனவே, உனதருகே...
Hun❤️Jess

No Gifs and Pics???
உனை பிரதிபலிக்க
ஓர் இணைப்பெண்
அல்லவென்பதால்!!!
 
Yes, I'm Selfish!!!
That's why I'm
seeking fr ur presence
following ur footprints
wishing u to be happy
praying fr ur wealth
loving what u love
caring ur favourites
calling u to hear ur voice
(even though u r busy)
getting scared to lose u
ignoring others to be with u
spamming & doing crazy things
...

Yes, I'm Selfish!!!
Cuz, I love u more that no one can imagine.
I never getting tired of loving u,
I'm loving it & living with it.

Screenshot_20231119-061232~2.png
And I'm just craving fr this...
Could u pls say this again "will call u later"
Could u pls text this again "will txt u later"
"in meeting"
"out of home"
...
I never know when that later will arrive
bt I'll wait until my last breath.

Cuz, I love the u inside u
&
never ever search me in somewhere.
I'm just in a few steps beside u...
Screenshot_20231119-061331~2.png
With Selfish love,
Hun❣
 
Yes, I'm Selfish!!!
That's why I'm
seeking fr ur presence
following ur footprints
wishing u to be happy
praying fr ur wealth
loving what u love
caring ur favourites
calling u to hear ur voice
(even though u r busy)
getting scared to lose u
ignoring others to be with u
spamming & doing crazy things
...

Yes, I'm Selfish!!!
Cuz, I love u more that no one can imagine.
I never getting tired of loving u,
I'm loving it & living with it.

View attachment 180276
And I'm just craving fr this...
Could u pls say this again "will call u later"
Could u pls text this again "will txt u later"
"in meeting"
"out of home"
...
I never know when that later will arrive
bt I'll wait until my last breath.

Cuz, I love the u inside u
&
never ever search me in somewhere.
I'm just in a few steps beside u...
View attachment 180277
With Selfish love,
Hun❣
:Like:
 
This morning, I was walking down my street.

On that way, in the corner of that coffee shop,
two friends were talking with giggling cheeks...
images (21)~2.jpeg
I looked at the sky and asked...
Hey, my Sky! how you doing???
images (24)~2.jpeg
Do u want me to see these dark clouds!!!

Did u sleep well last night?
Did u take ur Elevenses?
Wat's fr lunch?
Do u miss me like I miss u...

Oops...

Oh lub, pls can u stop this...
In a few minutes...
I crossed the street with a smile
as I saw the dark cloud cleared a little.
Drenched in ur memories with heavenly rain!!!

I know these dark clouds r just fr the season...
This too shall pass...

Then the blue Sky will bloom
with their fragrance!!!
:blush:

Dcv7Ly.gif
Till that I'll drench with ur drizzling memories!!!
Love❤️ Hope✨ Peace☘️
images (21)~2 (1).jpeg

:heart1:
 
❣️உந்தனருகினிலே!!!❣️

உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...

உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...

மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!

View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...!
உந்தனருகினிலே!!!❣️
Beautiful
 
So
This morning, I was walking down my street.

On that way, in the corner of that coffee shop,
two friends were talking with giggling cheeks...
View attachment 181091
I looked at the sky and asked...
Hey, my Sky! how you doing???
View attachment 181092
Do u want me to see these dark clouds!!!

Did u sleep well last night?
Did u take ur Elevenses?
Wat's fr lunch?
Do u miss me like I miss u...

Oops...

Oh lub, pls can u stop this...
In a few minutes...
I crossed the street with a smile
as I saw the dark cloud cleared a little.
Drenched in ur memories with heavenly rain!!!

I know these dark clouds r just fr the season...
This too shall pass...

Then the blue Sky will bloom
with their fragrance!!!
:blush:

View attachment 181094
Till that I'll drench with ur drizzling memories!!!
Love❤️ Hope✨ Peace☘️
View attachment 181095

:heart1:
So beautiful
 
வையிலினோடு வார்த்தைகளையும்
வாரிக்கொள்கிறாய் கண்ணம்மா!!!

1000006280~2.jpg

மௌனம் பேசும் மொழியாயினும்
விழிநீர் ததும்பையில்,

என் வார்த்தைகளும் விடயமாவது
உன் செவிகளுக்கு எட்டவில்லையோ!!!

தூர விலகிட துணிந்தும்
தீரா விழி தேடலின்,

கதியறிந்தும் விதியறிந்தும்
விடையறிந்தும் வினவிடும்,
வையிலின் வாரிகளில்...

❤️✨


:headphones:

 
கோடி ஆசைகளை கொண்டேன்
கோரியதோ சின்னஞ்சிறு ஆசைகள்...

தொய்கையில் தேற்றும் தோள்கள்
துவள்கையில் கோர்க்கும் விரல்கள்...

விட்டுக்கொடா பாசம்
கட்டியணைக்கும் நேசம்...

சின்ன சின்ன சண்டைகள்
சிறு இதழ் முத்தங்கள்...


கோருவனவெல்லாம் கிட்டியிருந்தும்
எட்டியிருக்கும் தூரங்கள்,
இதழ் திறா மௌனங்கள்.

மௌனம் கோரும் நேரம்
காதல் மொழியின் புன் முறுவல்களா???
காதல் போரின் கீறல்களா???

புன் முறுவல்கள்...

இதழ் திற இசையமுதும்,
மீட்டிடும் இதய துடிப்பும்.


கீறல்கள்...

நூறு முறை விசிறியெறிந்தும்
ஆயிரம் முறை உலவிடும் விழிகள்...

அவ்விழிகளும் காந்த விசை கொண்டதோ
சிதறி இவ்விதயத்துகள்களை ஈர்த்து
தன்னகத்தே கோர்த்துக்கொள்கிறது.
முன்னிலும் அழுத்தமாய் இதயத்தினுடே!!!

இதயத்தினுடே பொரிந்ததால் எனவோ...
உன் கீறல்களும் எனை வதைக்கிறது
உன் மௌனங்களும் எனை கொல்கிறது...


காதல்கொண்டேன் எனவே
என்னகமறியும்
கதைக்காத கதைகளையும்...

காதல்கொண்டாய் எனவே
யானும் மௌனமாய் சிதைகிறேன்...
உன்னகத்தே கொள்ளை கொண்ட எனை

அள்ளியணைக்க எனதருகே நீ இருப்பதால்.
 
நானூறு மைல் தொலைவில் அருகிருந்தவள்
நாற்பது மைல் தொலைவில்
சிறையிட்டு கொண்டவள்...

தான் கொண்ட அன்பினை
பகிர தயங்கியவள்
கொள்ளை ஆசை கொண்டும்
வெளி கொணர பதறியவள்...

கட்டு கட்டாய்
பக்க உரையாற்றும் எனையும்
மௌன மொழியோடு
பக்கம் இருக்க கற்றுத்தந்தவள்...

வாய்ப்புகள் இருந்தும்
வாளின் கீறல்கள்
கட்டியணைத்திட துடித்தும்
கிட்டிச் சேரா நிமிடங்கள்...

விழிகள் காணவில்லை
விரல்கள் தீண்டவில்லை
இதயத்தில் அழுந்தும் வலியிலும்
விழியோர ஈரத்திலும்
என் சுவாசக்காற்றை விட்டுச் செல்கிறேன்
என்னை நினைத்து நீ சுவாசிக்கும் நொடியில்
உன்னிதயத்தை மென்மையாய் வருடிட...
angel-wings.gif

ரணங்களின் நொடிகளில்
ராக கீதங்களின் மடியில்
உன்னோடு நான்!!!
images (30)~5.jpeg
 
Top