ஒரு மனைவி கணவனின் அன்பை எப்படி எப்படி உணருகிறாள் . (காமத்தை தவிர)?
1.படுக்கையில் இருந்து எழும்போது,நான் எழும்ப கூடாது என சத்தமில்லாமல அமைதியாக எழுந்து செல்லும்போது.
2. நான் எழும் முன் , பாலை எடுத்து, காய்ச்சி காபி/தேநீர்/பால் போட்டு வைக்கும்போது.
3.எனக்கு உடல்நிலை சரயில்லாத போது, தனக்கு சமைக்கவே தெரியவில்லை என்றாலும வலைதளங்களை பார்த்தாவது , சமைத்து கொடுக்கும்போது.
4.காலை சாப்பிடும்போதும் என்னுடன் சேர்ந்தே சாப்பிட வேண்டும் என்று அடம்பிடித்து சாப்பிடும்போது.
5.நான் எவ்வளவு கேவலமாக சமைத்தாலும் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று பொய் சொல்லும்போது .
6.அலுவலகம் சென்ற பின்பும் அவ்வப்போது அலைபேசியில் அழைத்து விசாரிக்கும்போது.
7.பிறந்தநாள் அன்று பிரமாண்ட படுத்த வேண்டும் என்று நினைத்து சொதப்பும்போது.
8.யாரிடமும் விட்டுக்கொடுக்காமல பேசும்போது.
9.பிரசவத்தின்போது கண் கலங்கிய போது.
10.இரவில் உறங்கும் குழந்தை திடீரென அழுதால, நான் விழித்து விட கூடாது என அவர் முதலாக எழுந்து அரை தூக்கத்திலே குழந்தையை மறுபடியும் தூங்க வைக்கும்போது.
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்…. அன்பில் உண்மையாக இருந்தால் செய்யும் சின்ன சின்ன விசயங்களிலும் அன்பை உணரலாம்.