Baron_Smith
Active Ranker
பனி விழும் காலத்தில்… ஓர் அழகான காலை வேளையில்… ஆதவன் தன் செங்கதிர்களால் பனித்துளிகளைக் கரைய வைக்க… அதை கண்ட பறவைகள் இன்பமாய் பருக எண்ணி, கூட்டமாய் ஆர்ப்பரித்துக்கொண்டு, இனிய ராகங்களுடன் பாடிச் செல்ல… இனிமையாய் என் கண்கள் திறக்க… என் கால்களோ என்னை வீட்டை விட்டு வெளியே கொண்டு வர… என் கண்கள் உன்னை நோக்க… அக்கணம் இரு பட்டாம்பூச்சிகள் ஊடாடி என்னைச் சுற்றி வர… என் இதயம் ஏங்கி மெதுவாய் துடிக்க… என் மனமோ வாடித் தவிக்க… அக்கணம் உன் ஓரப் பார்வை என் மேல் பாய… வெற்றுடலுக்குள் உயிராய் உட்புகுந்து… நின்றுபோன என் இதயத்தைத் துடிக்க வைத்தாய்…