• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Ninaivugalin sarugagal part 12

Babe dolly

Active Ranker
Nee varuvai ena
அங்கு இனகரேஷன் செரிமனி நடக்க நடந்து முடிந்த பின் பெயர் பட்டியலில் அவன் பெயர் இருக்கிறதா என்று நானும் நிவேதாவும் சென்று பார்த்தோம் அங்கு பார்த்தபோது அவனோடு முழு பெயர் குறிப்பிடவில்லை சுரேஷ் என்று மட்டுமே இருந்தது அங்கு சென்று பார்த்தால் அப்படி யாரும் இல்லை ஒருவேளை இன்னைக்கு வரலையோ இன்று கூட மனம் என்னை தெதி கொண்டிருந்தது,
பிறகு ஒரு வாரம் கழித்து எங்களுக்கு அந்த செய்தி கிடைத்தது அவன் வேறு ஒரு ஸ்கூல் இருக்கு சென்றுவிட்டான் என்று. காலங்கள் அப்படியே செல்ல அவன் ஞாபகம் வரும்போதெல்லாம் நான் மறைத்து வைத்திருந்த இந்த பேப்பர் கட்டிங்கை நான் எடுத்துப் பார்த்துக் கொள்வேன். நாட்கள் செல்ல ஒரு நாள் மிகவும் வேதனையாக இருந்தது அதனால் நான் நான் படிப்பில் கவனம் சிதறல்கள் நிறைய நிறைய இருந்தன
என் மேல் எனக்கு கோபம் வர நான் அந்த பேப்பர் கட்டிங்கை எடுத்து கிழித்து எறிந்து விட்டேன் பெரும் பேப்பரை மட்டும் தான் கேட்க முடிந்தது தூக்கி எரிய முடிந்தது ஆனால் மனதில் அவனை தூக்கி எறிய முடியவில்லை என்பதை அன்று கூட நான் உணர்ந்துவிட்டேன் என்று சரண்யாவிடம் கூறினாள.
அதன்பிறகு அவரை சந்திக்கவே இல்லையா என்று கேள்வியுடன் சரண்யா அவளை பார்த்தாள்.
அன்று கேட் பக்கம் அவனை பார்த்ததோடு சரி இதுவரையிலும் நான் அவனை காணவில்லை எல்லாம் சொல்லுவார்கள் உலகம் மிகவும் சிறியது என்று யார் என்றாலும் யாரையாவது காணத்தான் வேண்டும் ஒரு நாள் என்று அந்த மாதிரி எந்த ஒரு விஷயமும் எனது காதலின் நடக்கவும் இல்லை இதுவரை நான் காணவும் விரும்பவில்லை.. ஆனால் அவனிடம் நான் பேசி இருக்கிறேன் அது ஒரு கதை.

நான் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் எனக்கு வீட்டில் நான் இருக்கும் பொழுது என்னுடைய வகுப்பு தோழன் ஒருவன் என்னிடம் நல்ல தோழமையுடன் பழகி கொண்டிருந்தான்.
நான் என் அக்காவின் திருமணத்திற்காக, ஊரில் இருந்தேன் நன்றாக ஞாபகம் இருக்கிறது .அப்பொழுது அவன் நம்பர் எனக்கு பார்வர்ட் செய்தான். ஆனால் நான் அப்பொழுது எதும் மெசேஜ் பண வில்லை .நான் அங்கு பிஸியா இருந்தேன் .அதும் என்னை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்..
வீடு திரும்பிய வுடன் அவனுக்கு மெசேஜ் செய்ய முற்பட்டேன் . இவன் நம்பர் எனக்கு கிடைத்ததே அதிசயம்..மேஜிக் .என் நண்பன் வினு அவன் பக்கத்து ரூம் மேட் அவனுடைய நண்பன் ,சுரேஷின் ஸ்கூலில் படித்து இருக்கிறான் அவனுடைய நண்பன் ,ஆச்சரியமாக தான் இருந்தது, அப்பொழுது தான் எனக்கு ஒரு மொபைல வீட்டில் வாங்கி கொடுத்தார்கள் , அதில் பலன்ஸ் இல்லாத காரணத்தால் நான் என்னுடைய அம்மா வின் நம்பர் இருந்து மெசேஜ் கொடுத்தேன்.
சரண்யா ரிப்ளை வந்ததா என்று கேட்க, முதலில் என்னை யாரு என்று கேட்டான் .பிறகு நான் தான் என்று கூற எந்த ரிப்ளை யுன் இல்லை ..
சரண்யா : பணலய
ஜீவி :பண்ணான் நைட்
சரண்யா: என்ன பனான்

( ...to be continued)
 
Top