AgaraMudhalvan
Epic Legend
ஒரு கணப்பொழுதில்
நிகழ்ந்த
அற்புத தருணத்தை
காதல் என்கிறாய்
நான் அறிந்தவரை
பசி மறத்தல்
தூக்கம் கெடல்
நினைவின் மறதி
நிஜத்தின் மாயை
தானே சிரித்தல்
தடம் பிரளல்
மொழி தொலைத்தல்
தேடி அலைதல்
வாடி உருகுதல்
இவைதான் காதல்
இலக்கணம் பாராமல்
இரவு பகலாய்
பேசி தீர்த்த பின்னும்
எவனோ ஒருத்தனின்
ஒற்றை குறுஞ்செய்திக்காய்
ஓயாமல்
அலைபேசியின் திரையை
வெறித்து பார்க்கும்
என்னுள் எப்போது
நிகழ்ந்தது அந்த அற்புதம்?
சுதந்திர வெளியின்
சுவாசத்தை விட
உன் குரலின் சிறைவாசம் பிடித்துப்போய்
பித்தியாக பிதற்றும்
இந்த நொடி
இந்த நிலை
இந்த தருணம்தான்
காதல் என்றால் அது
தினம் தினம் நிகழட்டும்
மறுபடியும்
மறுபடியும் காதலிப்போமா


namma taan innum ippadiye irukoma aalu aaluku aalu vachithu irukanga

