AgaraMudhalvan
Epic Legend
அது என்னவோ தெரியவில்லை
தினந்தோறும் கட்டாயம்
மூன்று வேளை
உணவை அருந்திக்
கொள்வதைப் போலவே
அடிக்கடி உன் நினைவை
இதயத்தால் பருகி கொண்டு
விழிகளால் விடுமுறை செய்கிறேன்..
உன்னை நினைத்துக் கொண்டே
அந்த வலியின் தீயில்
பற்றி எரிந்து என்னை நானே புடம் போட்டு புத்தம் புதிதாய் வெளியேற்றுகிறேன்...
நான் உயிர் வாழ இந்த மூச்சு காற்று
எத்தனை அவசியமோ
அதை விட அத்தியாவசியமாகிபோனது
நீயும் உனது
நினைவுகளும் எனக்கு.
