உன்னை எண்ணாத
நாள் இல்லையே
நானாக நானும் இல்லையே...
வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய
தோள் இல்லையே
உன் போல யாரும் இல்லையே...
தீரா நதி நீதானடி
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்
நீதானடி வானில் மதி
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்...
தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி
பின்னோக்கி காலம் போகும் எனில்
உன் மன்னிப்பை கூறுவேன்