• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Informative அரட்டை உலக உளவியல்!!!

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
இங்கே எதை பதிவது எனபதில் கொஞ்சம் குழம்பி இருந்தேன், கணினி உலகில் பெருகிப்போன மெய்நிகர் (virtual) உறவுகளை உருவாக்குவதிலும், அந்த உறவுகளை கட்டிக்காப்பதிலும் இருக்கும் சிக்கல்களை பற்றி அலசுவோம் என்று முடிவெடுத்தேன்.

எதற்காக தமிழில்? எனக்கு சரளமாக எழுத வரும் ஒரேய மொழி என்பதால் மட்டுமே.

கணினி அரட்டை உலகத்தின் ஆன் பெண் தேவைகளையும் அவர்களது உளவியலையும் கொஞ்சம் அலசி ஆராய்ந்து அவற்றில் தெளிவு காண்பதே இந்த பதிவின் நோக்கம். இது ஒரு தொடர் பதிவாக எழுத ஆசை படுகிறேன் உங்களது ஆதரவை வேண்டி என் அரட்டை உலக உளவியலை துவங்கிகிறேன்.

இங்கே ஆன் பெண் திருநங்கையர் என அணைத்து பாலினரும் எதிர் பாலினத்தையோ அல்லது தன ஆசைக்கு ஏற்ப சுய பாலினத்தினரையோ தேடியே வருகிறார்கள், எளிதாக சொன்னால் இன்னொரு துணையை தேடியே எல்லோரும் வருகிறோம். எல்லோரின் தேடலும் ஒரு துணை எனும் புள்ளியில் இணைந்தாலும், கால சூழல், வழக்கை சூழல், உளவியல் தேவைகள், உடல் தேவைகள், இன்னும் பல வெறுப்பாடுகளால் வரும் ஒவ்வொரு நபரும் தனி ரகம் இந்த முதல் பதிவில் நான் சொல்ல இருப்பது ஒரு பெண்ணின் தவிப்பை ஒரு பெண்ணின் ஏக்கத்தை பற்றியது.

உண்மையில் இங்கே அதிகம் வருவது ஆண்களே, பெண்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்கிறது ஆனால் நம் சமூகத்தில் பெண்கள் தங்களின் ஆசைகளை வெளிகாட்டிக்கொண்டாள் அவளுக்கு வேற்று பெயர் வைத்து அழைப்பது வழக்கம் எனவே தான் அவள் தன்னை குறுக்கிக்கொண்டு ஆசைகளை அடக்கிக்கொண்டும் வருவதை தவிர்க்கிறாள்.

நூறு பேருக்கு மேல் இருக்கும் சாட் ரூமில் மொத்தம் 10 பெண்கள் இருந்துவிட்டால் அது அதிசயம். 90 ஆண்களும் அந்த பெண்ணை சுற்றி வளைக்கையில் அவள் கொஞ்சம் மூச்சு முடித்தான் போகிறாள். திணறி தேடி தனக்கான அந்த நொடிகள் தேவையான ஒருவனை அவள் பிடித்துவிட்டால் அவள் கிடைக்காத ஏக்கத்தில் மற்றவர் அவளை வேறு பெயர் கொண்டு அழைக்கிறார்கள். என்னதான் செய்வாள் அவளும்.

பெண்ணின் தேவை என்னவாக இருக்கிறது? ஒரு அரட்டை அறைக்கு அவள் வருவதறகான காரணம் என்னவாக இருக்கும்? என்பதை பற்றிய பதிவே இது.


பெண்ணின் தேவை இன்னது என்று பொதுமை படுத்திவிட முடியாது எனினும், பெரும்பாலான பெண்கள் இங்கே வருவதன் காரணம் தனிமை. தனிமை மிக கொடியது அதுவும் பெண்களுக்குள் இருக்கும் தனிமை தீ மிக கொடுமை. அது அவளை மெல்ல மெல்ல சுட்டு தின்றுவிட கூடியது. மணமான பெண், காதலில் இருப்பவள், ஆன் துணை அற்றவள், காதல் முறிந்து அழுது கொண்டு இருப்பவள் என தனிமைக்கு இலக்காவது பெரும்பாலும் பெண்களே. தனிமை பொழுதில் பெண்ணுக்கு ஒரு துணை தேவை படுகிறது அந்த துணை அவளை தொந்தரவுசெய்யாத, பின்தொடராத, அவள் விரும்பும் வலையில் அவளை கையாளும் ஒரு துணையாக இருக்க விரும்புகிறாள். சில வேளைகளில் அழுவதற்கும், சில வேளைகளில் காமம் கொள்வதற்கும், பல வேளைகளில் சிறிது குலாவுவுவதற்குமே அவள் விரும்புகிறாள்.

தனித்து இருத்தல் என்பது பெண்ணின் உளவியலில் ஒரு பேய்யை போன்றது. குடும்பப்பெண்கள் பலரும் தனித்து இருக்க விரும்புகிறார்கள். தங்களது அன்றாட குடும்ப சுமைகளில் இருந்து விடுபட்டு தனித்து தனக்கான நேரத்தில் தனக்கான ஒரு உலகத்தில் தனக்காக வாழ நினைக்கிறாள், அதற்கு ஒரு மாயா உலகத்தை அவள் மெய்நிகர் (virtual) உலகில் ஏற்படுத்திக்கிகொள்கிறாள். அவளைத்தான் நண்பர்களே நீங்கள் ஆண்ட்டி என பெயர் வைக்கிறீர்கள் அவளும் பெண்தான்.

ஆண்களின் தேவையை அவன் வெளிப்படையாக பேசி விடும் வேளையில் பெண்ணின் தேவையை அவள் வெளிப்படுத்த ஒரு ரகசிய நண்பன் தேவைப்படுவதும் கூட அரட்டை உலகத்திற்கு அவள் வருவதின் ஒரு காரணம். ஆசைகள் யாருக்கு தான் இருப்பது இல்லை? பெண் என்பதால் அவள் தன்னை குறுக்கி கொண்டு ஆசைகொள்ள விட்டால் ஆண்கள் நாம் யாரிடம் செல்வது? அவளுக்கான நேரத்தை நாம் இந்த மாய உலகத்திலாவது சீராக தர வேண்டும்.

ஒரே நேரத்தில் ஒரு ஆன் பல பெண்களோடு பேசுவது குற்றமில்லை அதுவே ஒரு பெண் பல ஆண்களோடு பேசிவிட்டால் அவளுக்கு வேசி பட்டம் கட்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம்? பெண்கள் குறைவாக இருக்கும் இடத்தில அவள் தனக்கான துணையை சரியாக தேர்ந்தெடுப்பதே கடினம், அப்படி அவள் தேர்ந்தெடுத்து அவனோடு பேசுகையில் மற்றவர் பொறாமை கொண்டு பாய்ந்து வருவது ஒரு விதத்தில் பெண்ணடிமைத்தனம். எனவே அவளுக்கான நேரத்தை அவளுக்காக ஆண்கள் நாம் உருவாக்கி கொடுக்கும் பொழுது அவள் நமக்காக அவளது நேரத்தை தானாக கொடுப்பாள்.

இது உங்களுக்கு பி[அரிச்சயமான ஒன்றாகவே இருப்பினும் படிப்பதில் தவறில்லை, எழுத்துப்பிழைகளையும் எனது கருது பிழைகளையும் பொறுத்துக்கொள்ளுங்கள்

தொடரும்ம்ம்.......
 
4 yrs indha chat la so much of passing clouds but still some girls are in touch with me i call them angels.:) tamil pakum bodhu more happy than anything.
 
அட்டு

தனிமையின் கொடுமை ஒரு பெண்ணை சாட் உலகிற்குள் கொண்டுவருவதை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் ஒரு பெண் சுயநம்பிக்கை தேடி சாட் உலகிற்குள் நுழைவதை பற்றி பார்ப்போம்.

தான் அழகை உணராத பெண்கள் இங்கே பலர் உண்டு "நான் கருப்பு" "என் முகத்துல இருக்குற பருக்கள் என்ன அசிங்கமா காட்டுது" "இந்த தளும்பால என் முக அழகே கேட்டு போச்சு" இப்படி பல பெண்கள் தங்கள் அழகை உணராது கவலை கொள்வது உண்டு. சாட்டுக்குள் வரும் பெரும்பான்மையான பெண்கள் இந்த மனநிலையில் தான் வருகிறார்கள்.

அழகு என்பது எங்கே இருக்கிறது?
பார்ப்பவரின் கண்களில் அல்ல, நாம் முகம் பார்க்கும் கண்ணாடிகளில் அல்ல, நம்மை பார்த்து ரசிப்பவர்களிடம் அல்லது பரிகாசிப்பவர்களிடமும் அல்ல மாறாக அழகு என்பது நம்முள் இருந்து வரும் ஒரு கர்வம். உண்மையில் இங்கே யாரும் அசிங்கமாய் படைக்கப்படுவதே இல்லை, அவலட்சணம் என யோசிக்கப்பட வைக்கிறார்கள் அவ்வளவே.

கருப்பில் இருக்கும் உண்மை வேறு இதில் இருக்கும்? மருவும், மச்சமும் , தழும்புகளும் நினைவுகளை சுமந்து நிற்கும் "slam book signatures". தான் தேடி பார்த்த வரை பெண்களில் அழகுஅற்றவள் என்பவளை கண்டது இல்லை, ஒரு ஒரு பெண்ணுக்குள்ளும் ஒரு அழகு புதைந்து இருப்பதை என்னால் உணர முடிகின்றது. நான் உணர்ந்ததை அவளும் உணர்ந்துகொண்டாள் தன அழகை தானே ஆராதிக்க துவங்கினால், ஒரு மாற்றத்தை அவளால் உணர முடியும்.

நிமிர்ந்த நடையும், மிடுக்கான பார்வையும்,மெல்லச் சிரித்த இதழ்களும் எந்த பெண்ணையும் பேரழகியை காட்டும் ஆபரணங்கள். இவற்றை சரியான விகிதத்தில் உடுத்தி பார் பெண்ணே நீ உனக்கு முதலில் அழகாக தெரிவை பின் நிச்சயமாய் உலகையே உன்னை அழகாக பார்க்கும.

சரி இப்போ இங்க எதுக்கு இவளோ பில்டப்பு தர?
நம்ம சாட்டுக்கு வர பெரும்பான்மையான பெண்களுக்கு தங்களது உடல் அழகின் மீது நம்பிக்கை இருப்பது இல்லை. நேரில், நிஜ உலகில் யாரும் அவர்களை ரசிக்கவில்லை எனும் எண்ணத்தால் இங்கே வருகிறவர்கள் அதிகம். இந்த எண்ணத்தை அவளுக்குள் இருந்து எடுக்க நாம் அவளை ஆராதிப்பது மிக அவசியம். பெண்ணை வர்ணனைக்கும் பொழுது நாம் உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தின் ஆதி ஆழத்தில் இருந்து அவளை ரசித்து வர்ணித்தால் அவளுக்குள் இருக்கும் இந்த "complex" அவளை விட்டு நீங்கக்கூடும்.

அவளது "complex "ஐ உடைத்தவன் எனும் வகையில் உன் மீது ஒரு கரிசனம் பிறக்கவும் வாய்ப்பு உண்டு. ஆகவே நீங்க அட்டு என ஒதுக்கும் பெண்களில் இருக்கும் அழகையும் ரசித்து பார்க்க ஆரம்பியுங்கள் நண்பர்களே.

சரி அது என்ன எப்போ பாத்தாலும் பொண்ணுங்கள பத்தியே பேசுற ஆண்கள் நாங்க என்ன பாவம் செஞ்சோம்னு கேக்குரீங்களா? பெருசா காரணம் ஏதும் இலிங்க நான் ஆன். எனக்கு நான் செய்த தவறுகள் தெரியும் அவற்றை என் நண்பர்கள் தவிர்க்க வேண்டியே , என் நண்பர்கள் பெண்களை புரிந்துகொள்ள வேண்டியே பெண்களை பற்றி பகிர்கிறேன். தொடர்ந்து வரும் பதிவுகளில் ஆண்களை சுமந்தும் பதிவுகள் வரும்.

தொடரும்ம்ம் ....
 
cha nalla post thaan aana evaloooo spelling erors lol... palaya posts padikurapo ninaivugal nimadhiyai tharugiradhu
 
இங்கே எதை பதிவது எனபதில் கொஞ்சம் குழம்பி இருந்தேன், கணினி உலகில் பெருகிப்போன மெய்நிகர் (virtual) உறவுகளை உருவாக்குவதிலும், அந்த உறவுகளை கட்டிக்காப்பதிலும் இருக்கும் சிக்கல்களை பற்றி அலசுவோம் என்று முடிவெடுத்தேன்.

எதற்காக தமிழில்? எனக்கு சரளமாக எழுத வரும் ஒரேய மொழி என்பதால் மட்டுமே.

கணினி அரட்டை உலகத்தின் ஆன் பெண் தேவைகளையும் அவர்களது உளவியலையும் கொஞ்சம் அலசி ஆராய்ந்து அவற்றில் தெளிவு காண்பதே இந்த பதிவின் நோக்கம். இது ஒரு தொடர் பதிவாக எழுத ஆசை படுகிறேன் உங்களது ஆதரவை வேண்டி என் அரட்டை உலக உளவியலை துவங்கிகிறேன்.

இங்கே ஆன் பெண் திருநங்கையர் என அணைத்து பாலினரும் எதிர் பாலினத்தையோ அல்லது தன ஆசைக்கு ஏற்ப சுய பாலினத்தினரையோ தேடியே வருகிறார்கள், எளிதாக சொன்னால் இன்னொரு துணையை தேடியே எல்லோரும் வருகிறோம். எல்லோரின் தேடலும் ஒரு துணை எனும் புள்ளியில் இணைந்தாலும், கால சூழல், வழக்கை சூழல், உளவியல் தேவைகள், உடல் தேவைகள், இன்னும் பல வெறுப்பாடுகளால் வரும் ஒவ்வொரு நபரும் தனி ரகம் இந்த முதல் பதிவில் நான் சொல்ல இருப்பது ஒரு பெண்ணின் தவிப்பை ஒரு பெண்ணின் ஏக்கத்தை பற்றியது.

உண்மையில் இங்கே அதிகம் வருவது ஆண்களே, பெண்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்கிறது ஆனால் நம் சமூகத்தில் பெண்கள் தங்களின் ஆசைகளை வெளிகாட்டிக்கொண்டாள் அவளுக்கு வேற்று பெயர் வைத்து அழைப்பது வழக்கம் எனவே தான் அவள் தன்னை குறுக்கிக்கொண்டு ஆசைகளை அடக்கிக்கொண்டும் வருவதை தவிர்க்கிறாள்.

நூறு பேருக்கு மேல் இருக்கும் சாட் ரூமில் மொத்தம் 10 பெண்கள் இருந்துவிட்டால் அது அதிசயம். 90 ஆண்களும் அந்த பெண்ணை சுற்றி வளைக்கையில் அவள் கொஞ்சம் மூச்சு முடித்தான் போகிறாள். திணறி தேடி தனக்கான அந்த நொடிகள் தேவையான ஒருவனை அவள் பிடித்துவிட்டால் அவள் கிடைக்காத ஏக்கத்தில் மற்றவர் அவளை வேறு பெயர் கொண்டு அழைக்கிறார்கள். என்னதான் செய்வாள் அவளும்.

பெண்ணின் தேவை என்னவாக இருக்கிறது? ஒரு அரட்டை அறைக்கு அவள் வருவதறகான காரணம் என்னவாக இருக்கும்? என்பதை பற்றிய பதிவே இது.


பெண்ணின் தேவை இன்னது என்று பொதுமை படுத்திவிட முடியாது எனினும், பெரும்பாலான பெண்கள் இங்கே வருவதன் காரணம் தனிமை. தனிமை மிக கொடியது அதுவும் பெண்களுக்குள் இருக்கும் தனிமை தீ மிக கொடுமை. அது அவளை மெல்ல மெல்ல சுட்டு தின்றுவிட கூடியது. மணமான பெண், காதலில் இருப்பவள், ஆன் துணை அற்றவள், காதல் முறிந்து அழுது கொண்டு இருப்பவள் என தனிமைக்கு இலக்காவது பெரும்பாலும் பெண்களே. தனிமை பொழுதில் பெண்ணுக்கு ஒரு துணை தேவை படுகிறது அந்த துணை அவளை தொந்தரவுசெய்யாத, பின்தொடராத, அவள் விரும்பும் வலையில் அவளை கையாளும் ஒரு துணையாக இருக்க விரும்புகிறாள். சில வேளைகளில் அழுவதற்கும், சில வேளைகளில் காமம் கொள்வதற்கும், பல வேளைகளில் சிறிது குலாவுவுவதற்குமே அவள் விரும்புகிறாள்.

தனித்து இருத்தல் என்பது பெண்ணின் உளவியலில் ஒரு பேய்யை போன்றது. குடும்பப்பெண்கள் பலரும் தனித்து இருக்க விரும்புகிறார்கள். தங்களது அன்றாட குடும்ப சுமைகளில் இருந்து விடுபட்டு தனித்து தனக்கான நேரத்தில் தனக்கான ஒரு உலகத்தில் தனக்காக வாழ நினைக்கிறாள், அதற்கு ஒரு மாயா உலகத்தை அவள் மெய்நிகர் (virtual) உலகில் ஏற்படுத்திக்கிகொள்கிறாள். அவளைத்தான் நண்பர்களே நீங்கள் ஆண்ட்டி என பெயர் வைக்கிறீர்கள் அவளும் பெண்தான்.

ஆண்களின் தேவையை அவன் வெளிப்படையாக பேசி விடும் வேளையில் பெண்ணின் தேவையை அவள் வெளிப்படுத்த ஒரு ரகசிய நண்பன் தேவைப்படுவதும் கூட அரட்டை உலகத்திற்கு அவள் வருவதின் ஒரு காரணம். ஆசைகள் யாருக்கு தான் இருப்பது இல்லை? பெண் என்பதால் அவள் தன்னை குறுக்கி கொண்டு ஆசைகொள்ள விட்டால் ஆண்கள் நாம் யாரிடம் செல்வது? அவளுக்கான நேரத்தை நாம் இந்த மாய உலகத்திலாவது சீராக தர வேண்டும்.

ஒரே நேரத்தில் ஒரு ஆன் பல பெண்களோடு பேசுவது குற்றமில்லை அதுவே ஒரு பெண் பல ஆண்களோடு பேசிவிட்டால் அவளுக்கு வேசி பட்டம் கட்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம்? பெண்கள் குறைவாக இருக்கும் இடத்தில அவள் தனக்கான துணையை சரியாக தேர்ந்தெடுப்பதே கடினம், அப்படி அவள் தேர்ந்தெடுத்து அவனோடு பேசுகையில் மற்றவர் பொறாமை கொண்டு பாய்ந்து வருவது ஒரு விதத்தில் பெண்ணடிமைத்தனம். எனவே அவளுக்கான நேரத்தை அவளுக்காக ஆண்கள் நாம் உருவாக்கி கொடுக்கும் பொழுது அவள் நமக்காக அவளது நேரத்தை தானாக கொடுப்பாள்.

இது உங்களுக்கு பி[அரிச்சயமான ஒன்றாகவே இருப்பினும் படிப்பதில் தவறில்லை, எழுத்துப்பிழைகளையும் எனது கருது பிழைகளையும் பொறுத்துக்கொள்ளுங்கள்

தொடரும்ம்ம்.......
Firstly Thamillla pottu riukrathu alaga iruku
Aprom ithu mathuri nala topics forumla pakrathu nala iruku :inlove:

4 yrs indha chat la so much of passing clouds but still some girls are in touch with me i call them angels.:) tamil pakum bodhu more happy than anything.
neenga solra passing clouds kuda oru angel than mr bean :angel:
 
@satz
அற்புதமான பதிவு தோழரே...

Ennama feel pani eluthura man...

தவறுகளை தவிர்ப்போம்...
மனிதத்தை மதிப்போம்...
ஏக்கத்தை உணிர்வோம்...
நட்பு பாராட்டுவோம்...
அன்போடு அரவனைபோம்...

Stay positive...happy chatting..

:angel:

Ennaiyum tamizh la elutha vachuta:giggle:
 
Top