• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அந்த மூன்று நாட்கள் !!!...

Speed123

Wellknown Ace
பெண்ணை போற்றும் இவ்வுலகில்
அவளே தீண்டத்தகாதவள் ஆனாள்
அந்த மூன்று நாட்கள் !

பெண்ணை தெய்வமாக வணங்குவோரும்
அவள் தெய்வத்தை வணங்க தடையிட்டனர்
அந்த மூன்று நாட்கள் !

பூவைப்போல் மென்மையானவள் பெண்
அவள் பூவை தொட்டால் கருகிவிடும் என்றனர் அந்த மூன்று நாட்கள் !

பெண்ணின் உதிரத்தில் இருந்து உருவான சிசுவை கொண்டாடும் உற்றார்
அவள் உதிரப்போக்கை உணர்வதில்லை
அந்த மூன்று நாட்கள் !

உடலில் மிக வலிமையான எலும்புகளும்
முதுகுத்தண்டும் வாள் வீசி சண்டை இடுகின்றனர் அந்த வலிகளையும் பொறுக்கிறாள் பெண் அந்த மூன்று நாட்கள் !

தினம் பம்பரமாய் சுற்றி திரியும் பெண்
ஓர் இடத்தில் அமரமுடியாமல் நிற்க முடியாமல் வேதனையை அனுபவிக்கிறாள் அந்த மூன்று நாட்கள் !

ஒன்றல்ல இரண்டல்ல மாதம் மாதம் இந்த வலிகளையும், வேதனையையும், உதிரப்போக்கையும் அனுபவிக்கிறாள் பெண் அந்த மூன்று நாட்கள் !

உறவுகளின் ஆதரவும் அவளவனின் முத்தங்களும் அவளுக்கு அரவணைப்பாய் இருந்தால் தூசு போல் கடந்து விடுவாள் பெண் அந்த மூன்று நாட்களை !!!...DVR
 
now translate that into english so everyone can enjoy it
 
I will try to translate it may be ..... I lag n poetic words... Will try em with simple non poetic regular words
 
THOSE THREE DAYS......
The world in wch women are respected, is the same world where women bear the forbidden sin for THOSE THREE DAYS......
Those who worshipped women,built a barricade for 'em not to worship God (s) for THOSE THREE DAYS.....
Women are as delicate and ornate as flowers, but they says that the delicate flowers LL die if she touches 'em for THOSE THREE DAYS......
This world plaudits the fetus and the child she bore , but despises her vaginal discharge for THOSE THREE DAYS........
A women tolerate and cope the pain of war between her bones and flesh during THOSE THREE DAYS....
Being a fashionista her self, she gets tormented by not able to sit or stand and endure the pain during THOSE THREE DAYS...
Not once not twice... It's an eternity of grieve and distress she must go thru every month FOR THOSE THREE DAYS.....
A true love and her guy's caress can give her the heroism and endurance to make those torture to get wash like a foam for THOSE THREE DAYS!!!!!!........
 
THOSE THREE DAYS......
The world in wch women are respected, is the same world where women bear the forbidden sin for THOSE THREE DAYS......
Those who worshipped women,built a barricade for 'em not to worship God (s) for THOSE THREE DAYS.....
Women are as delicate and ornate as flowers, but they says that the delicate flowers LL die if she touches 'em for THOSE THREE DAYS......
This world plaudits the fetus and the child she bore , but despises her vaginal discharge for THOSE THREE DAYS........
A women tolerate and cope the pain of war between her bones and flesh during THOSE THREE DAYS....
Being a fashionista her self, she gets tormented by not able to sit or stand and endure the pain during THOSE THREE DAYS...
Not once not twice... It's an eternity of grieve and distress she must go thru every month FOR THOSE THREE DAYS.....
A true love and her guy's caress can give her the heroism and endurance to make those torture to get wash like a foam for THOSE THREE DAYS!!!!!!........
Translation ah
 
Thankyou for the translation and i will say i found it beautiful (but please keep it to english )
 
@Gurll commendable effort handsdown.
the actual credit all goes to the creator for inspiring you translate and shed light on your additional dexterity.
தனிமை கொடுமை!!!..

இரவு நேரம் நீண்டு செல்ல
கால் நரம்பு ரெண்டும் பிண்ணிக் கொள்ள
கடும் வலியை உணர்த்தியது எந்தன் விரல்கள்

மறதி என்ற சொல் மடிந்து போக
உன் நினைவுகள் வந்து என்னைக் கொல்ல
கடும் குளிரை உணர்ந்த எந்தன் தலையோ
கடந்த கால் வாழ்வை அசைபோட்டது

நரம்பை உடைக்க
திரவ இரத்தம் உறைந்தது
உறங்கவிடாமல்
ஊசியாய் குத்தியது உன் எண்ணம்
தூசு விழுந்த விழிகள் தூங்க மறுத்தது
பாரம் கொண்ட மனதிற்கு
தூக்கம் என்பது வெகுதூரமே
கொடுமையிலும் கொடுமை
இளமையில் தனிமை ஆகுமே!
எப்போது என் துன்பம் தீருமோ?
விரைவில்
உன் நினைவில்
என் ஆவி வெளியேருமே!!!...DVR
 
காதல் முதல் கல்லறை வரை......

உனக்கு நான் எனக்கு நீ
என்று முடிவு செய்தேன்..
இரு இதயங்களை
இடம் மாற்றிக் கொண்டேன்..
உன் சுவாசத்தில் கலந்தேன்..
இமைகள் மூட மறந்தேன்..
காதலில் கரைந்தேன்..!

இறுதியில் நீ என்னை விட்டு
பிரிந்து சென்றதும் உடைந்தேன்..

மதியில்லா மடையன் நான்

தூக்கத்தை விற்று காதல்
வாங்கினேன்..
வாங்கிய காதலால் காயம்
கொண்டேன்..

உன்னால் தொலைத்த
நிம்மதியை தேடுகிறேன்
இன்னும் கிடைத்தபடில்லை..

உன்னில் தொலைத்த
என் கனவுகளை தேடுகிறேன்
இன்றும் கிடைக்கவில்லை..

ஒருவேளை இனி கல்லறையில்
தான் கிடைக்குமோ???...DVR
 
காதல் முதல் கல்லறை வரை......

உனக்கு நான் எனக்கு நீ
என்று முடிவு செய்தேன்..
இரு இதயங்களை
இடம் மாற்றிக் கொண்டேன்..
உன் சுவாசத்தில் கலந்தேன்..
இமைகள் மூட மறந்தேன்..
காதலில் கரைந்தேன்..!

இறுதியில் நீ என்னை விட்டு
பிரிந்து சென்றதும் உடைந்தேன்..

மதியில்லா மடையன் நான்

தூக்கத்தை விற்று காதல்
வாங்கினேன்..
வாங்கிய காதலால் காயம்
கொண்டேன்..

உன்னால் தொலைத்த
நிம்மதியை தேடுகிறேன்
இன்னும் கிடைத்தபடில்லை..

உன்னில் தொலைத்த
என் கனவுகளை தேடுகிறேன்
இன்றும் கிடைக்கவில்லை..

ஒருவேளை இனி கல்லறையில்
தான் கிடைக்குமோ???...DVR
முதலிரவு
இதுதான் முதல் முறை
புது புடவை கட்டி
தலை நிறைய பூச்சூடி
தங்க ஆபாரணங்கள் அணிந்து
ஆசையோடு அலங்கரிகப்பட்ட
தனி அறையில் தனித்து இருந்தேன்...
என்னவனின் வருகைக்காக
வழி மேல் விழி வைத்து
காத்துக் கொண்டிருந்தேன்...!
.
.
இந்நாள் எந்தன் நீண்ட நாள் கனவு
என் காதல் மன்னனை
கரம் பிடித்துவிட்டேன் என்ற சந்தோஷத்தில் நான்
திளைத்திருந்தேன்..!
.
.
இவ்உலகம் உறங்கிய பின்பு
அவனிடம் என்னை
முழுவதுமாய் ஒப்படைக்க
தயார் செய்து கொண்டேன்...
அவனிடம் என்ன சொல்லி
என்னை தருவது என்ற
தயக்கத்திலும் மூழ்கிருந்தேன்...
.
.
மனதில் ஒருவித மயக்கம்!
மன்னவன் என்னை
என்னவெல்லாம் செய்ய போகிறானோ?
என்ற ஆவலும்,
எதிர்பார்ப்பும்,
அளவு கடந்து சென்றது...!
.
.
'காமம்' பற்றி
எண்ணிலடங்கா
ஆசைகள் கொண்டிருந்தேன்...
பலபல கனவுகளும் கண்டிருந்தேன்
அதே நேரம்
கன்னி உடல் தாங்குமா என்ற
கவலையும் ஆட்கொண்டிருந்தேன்..!
.
.
வாழ்க்கை தந்தவன்
காதலோடு வந்தான்
என் அருகில்
காமத்தோடு நெருங்கினான்
என்னுள்
ஆர்வம் ஒரு பக்கம்!
அச்சம் ஒரு பக்கம்!
.
.
அவனை என்
கையில் அள்ளி அணைத்திட
ஆசை வந்தது
இருந்த போதிலும்
ஏதோ இனம்புரியாத உணர்வு ஒன்று
தடுத்து நின்றது!!!
.
.
நாணத்தால் நான் தலை தாழ்த்தி
நின்றிருந்தேன்
என் தலை நிமிர்த்தி
என் கண்களை
தன் காதலால் உற்று நோக்கினான்
அதில்,
சந்தோஷம்!
ஏக்கம்!
தயக்கம்!
தவிப்பு!
பாசம்!
பயம்!
காதல்!
காமம்!
ஆசை!
என அனைத்தும்
ஒன்று சேர்ந்து என்னை
வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதை
உணர்ந்து கொண்டான்!!!
.
.
கொஞ்சம் விலகி நின்று!
உன்னுள்
ஓடும் எண்ணங்கள் யாவும்..
என்னுள்ளும்
ஓடிக் கொண்டிருக்கிறது என்றான்!!!
.
.
அவன் முகத்தை பார்த்தேன்
அன்று தான் தெரிந்து கொண்டேன்
ஆணின் வெட்கமென்பது
மிக அபரிமிதமானது என்று...!
.
.
பின்பு இருவம்
மனம் விட்டு பேசி
இரவை தீர்த்தோம்!!!

என் இதயத்தில்
ஒரு ஓரமாக இருந்தவன்!
அன்றிரவு முதல்
என் இதயமாக மாறினான்!
.
.
ஒருவரை ஒருவர்
முற்றிலுமாய்
புணர்ந்து கொள்ளும்
முதலிரவை விட...
ஒருவரை ஒருவர்
முழுவதுமாய்
புரிந்து கொள்ளும்
முதலிரவு அழகானது..
அற்புதமானது..!

(குறிப்பு: நிச்சயக்கப்பட்ட திருமணம்
செய்த ஆண்களுக்கு...)

பலநாள் பசி என்று
பற்றென்று பாய்ந்து
பெண் எனும் மென்மை பூவை
கசக்கி எரிந்து விடாதீர்கள்..
பாசத்தோடு பேசி பழகி
அவளின் அன்பை பெற்றதும்
பூவின் வாசம் பெறுங்கள்..!
.
.
பெண்ணானவள்
சொந்த மண்..
பெற்றெடுத்த பெற்றோர்..
பிறந்து வளர்ந்த வீடு..
பேணி வளர்த்த தாத்தா பாட்டி..
செல்லம் கொடுத்த சகோதரர்கள்..
பாசம் அளித்த சகோதரிகள்...
நேசம் மிகுந்த நண்பர்கள்..
மேலும் சொந்தங்கள் பந்தங்கள்
இன்னும் பலபல என
அனைத்தையும் விட்டுவிட்டு
உன்னோடு வருகிறாள்
உனக்காக மட்டும் வருகிறாள்
.
.
அவள் உன்னோடும்
உன் குடும்பத்தோடும்
இணைந்து கொள்ள
சில மணி நேரங்கள் ஆகலாம்
சில நாட்கள் ஆகலாம்
ஏன் சில மாதங்கள் கூட ஆகலாம்
அவளின் மனநிலையை
புரிந்து கொண்டு அதன் படி
நடந்து கொள்ளுங்கள்
.
.
அவள் விருப்பப்படி விட்டுவிடு
தவறுகள் உன் மேல் இருந்தபோதிலும்
கொஞ்சம் விட்டு கொடு தப்பில்லை..
எவனுக்கெல்லாமோ விட்டு கொடுத்து போகிறோம்..
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தவளுக்காக
நம்மால் இது கூட பண்ணமுடியாதா?
.
.
திருமணத்திற்கு முன்
பெரும்பாலும் நம் நாட்களையெல்லாம்
நண்பர்களுடன் தான் கழித்திருப்போம்
திருமணத்திற்கு பின்
அவளோடு அதிக நேரம் செலவிடுங்கள்
அதற்காக நண்பர்களை விட்டு விலகி
விடுங்கள் என்று சொல்லவில்லை
அவர்களுடன் செலவிடும்
நேரத்தை குறைத்து கொள்ளுங்கள்
என்கிறேன்
உனக்காக வந்தவளை ஒத்தையில்
உக்கார வைத்துவிட்டு
நாம் நண்பர்களோடு
அரட்டைகள் அடிப்பது நியாயமா?
.
.
புதிதாய் திருமணம் ஆண் பற்றி
சமூகம் சொல்லும்
சில விஷயங்கள் இதோ
வீட்டை விட்டு வெளியில் வரமால்
எந்நேரமும் அதே பொழப்பில் உள்ளான்
என்பார்கள் இல்லையென்றால்
கட்டுன பொண்டாட்டியின்
கால் அடியில் கிடக்கும்
பொண்டாட்டிதாசன் என்பார்கள்...!
.
.
பைத்தியக்காரர்கள் எப்பவுமே
உளரிக் கொண்டுதான் இருப்பார்கள்
இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாதே!
.
.
உலகம் ஆயிரம் சொல்லும்
அவற்றை எல்லாம்
காதில் போட்டுக் கொள்ளாதே!!!

அன்போடு அவளுடன் இருந்து கொள்!
அக்கரையோடு அவளை
பார்த்துக் கொள்!
காலமெல்லாம் அவளோடு
காதலுடன் வாழ்ந்து கொள்!!!...DVR
 
பெண்ணை போற்றும் இவ்வுலகில்
அவளே தீண்டத்தகாதவள் ஆனாள்
அந்த மூன்று நாட்கள் !

பெண்ணை தெய்வமாக வணங்குவோரும்
அவள் தெய்வத்தை வணங்க தடையிட்டனர்
அந்த மூன்று நாட்கள் !

பூவைப்போல் மென்மையானவள் பெண்
அவள் பூவை தொட்டால் கருகிவிடும் என்றனர் அந்த மூன்று நாட்கள் !

பெண்ணின் உதிரத்தில் இருந்து உருவான சிசுவை கொண்டாடும் உற்றார்
அவள் உதிரப்போக்கை உணர்வதில்லை
அந்த மூன்று நாட்கள் !

உடலில் மிக வலிமையான எலும்புகளும்
முதுகுத்தண்டும் வாள் வீசி சண்டை இடுகின்றனர் அந்த வலிகளையும் பொறுக்கிறாள் பெண் அந்த மூன்று நாட்கள் !

தினம் பம்பரமாய் சுற்றி திரியும் பெண்
ஓர் இடத்தில் அமரமுடியாமல் நிற்க முடியாமல் வேதனையை அனுபவிக்கிறாள் அந்த மூன்று நாட்கள் !

ஒன்றல்ல இரண்டல்ல மாதம் மாதம் இந்த வலிகளையும், வேதனையையும், உதிரப்போக்கையும் அனுபவிக்கிறாள் பெண் அந்த மூன்று நாட்கள் !

உறவுகளின் ஆதரவும் அவளவனின் முத்தங்களும் அவளுக்கு அரவணைப்பாய் இருந்தால் தூசு போல் கடந்து விடுவாள் பெண் அந்த மூன்று நாட்களை !!!...DVR
Speedu Ingayum kavidhaiya .. nalla irruku man
 
Top