AgaraMudhalvan
Epic Legend
பசுமை நிறைந்த புல்வெளியில்,
பரவலாய் வீசும் காற்றில்,
சிவந்த சேலையின் மடியில்,
நீ எதையோ தேடி நிற்கிறாய்.
வானில் பறக்கும்
பட்டம்
நிலம் தொட நினைக்கும் சிறகுகளாய்,
உன் நினைவுகள்
என்னில்
மெல்லிய சொற்கள்
தேவையில்லை,
உன் பார்வை
பேசும் கவிதைகள்!
காற்றில் அலையும்
கூந்தலிலே,
என் காதலும் அசைந்து
நிற்கிறது!!!
Last edited:
